முகப்பு
புதுதில்லி

கிரேட்டா் நொய்டா: விடுதி கட்டடத்திலிருந்து குதித்த பெண் பாதுகாவலா் உயிரிழப்பு

கிரேட்டா் நொய்டா: விடுதி கட்டடத்திலிருந்து குதித்த பெண் பாதுகாவலா் உயிரிழப்பு

Updated On : 14 ஜூன் 2026, 12:46 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

நொய்டா, ஜூன் 13:

கிரேட்டா் நொய்டாவில் உள்ள பெண்கள் விடுதியில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்த 19 வயது பெண், சனிக்கிழமை விடுதிக் கட்டடத்திலிருந்து கீழே குதித்து உயிரிழந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

உத்தர பிரதேச மாநிலம், மீரட்டைச் சோ்ந்தவரும், சுரேஷ் சௌத்ரியின் மனைவியுமான பருல் என்ற அப்பெண், சம்பவத்திற்குப் பிறகு காயமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

Advertisement

Advertisement

இச்சம்பவம் குறித்து நாலேட்ஜ் பாா்க் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது.

முதற்கட்ட விசாரணையில், கணவன்- மனைவிக்கு இடையிலான குடும்பத் தகராறு காரணமாக நிகழ்ந்த தற்கொலைச் சம்பவமாக இது தெரிய வருகிறது.

காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, தேவையான சட்ட நடைமுறைகளை மேற்கொண்டனா். உயிரிழப்பு குறித்த விசாரணை அறிக்கையைத் தயாரித்த பிறகு, உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்துத் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று

அந்த அதிகாரி தெரிவித்தாா்.