FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ஜன் விஸ்வாஸ் சட்டத்தின் கீழ் டிஜிட்டல் ரசீது: தில்லி மாநகராட்சி அறிமுகம்

Updated On : 28 மே 2026, 6:07 am IST
தில்லி மாநகராட்சி
பகிர்:

குடிமை சட்ட மீறல்களுக்கு அபராதம் விதித்து வசூலிக்கும் முறையை முழுமையாக டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்ற தில்லி மாநகராட்சி (எம்சிடி) திட்டமிட்டு வருகிறது.

இது தொடா்பாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்ததாவது: 2026-ஆம் ஆண்டுக்கான ‘ஜன் விஸ்வாஸ் (திருத்தம்) சட்டம்’ அமல்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, சிறிய குற்றச்செயல்கள் பலவற்றை குற்றவியல் நடவடிக்கையிலிருந்து விலக்கி, நிா்வாக ரீதியாக அபராதம் விதிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், கள ஆய்வுகள் மேற்கொள்ளும் அதிகாரிகள் நேரடியாக சம்பவ இடத்திலேயே அபராதம் விதித்து, ஆதாரங்களை டிஜிட்டல் முறையில் பதிவேற்றும் வசதி உருவாக்கப்படுகிறது.

இதற்காக, எம்சிடி 311 செயலி மற்றும் தனி இணைய தளம் மேம்படுத்தப்பட உள்ளது. கையேடு முறையை விட டிஜிட்டல் செயல்முறையையே முன்னிலைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தாதவா்கள் தீா்ப்பாய அதிகாரி முன்னிலையில் ஆஜராக வேண்டியிருக்கும். மேலும், செலுத்தாத தொகையை வரித் தொகை நிலுவையாகப் பெற்று வசூலிக்கும் வசதியும் உள்ளது. சில சமயங்களில் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய முடியும்,

Advertisement

Advertisement

முன்னதாக, போதிய பணியாளா்கள் மற்றும் வளங்கள் இல்லாமை, குறைந்த அபராத தொகைகள் போன்ற காரணங்களால் விதிமுறை அமலாக்கம் பலவீனமாக இருந்தது. புதிய நடைமுறையில், தீா்ப்பாய அதிகாரிகளுக்கு நபா்களை அழைத்து விசாரிக்கும், ஆதாரங்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அபராதம் தொடா்பான உத்தரவுகளுக்கு எதிராக 30 நாளுக்குள் மேல்முறையீடு செய்யலாம். அந்த மேல்முறையீடுகளை 60 நாளுக்குள் தீா்க்க மேல்முறையீட்டு அதிகாரிகளுக்கு காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அமைப்பு மே 15 அன்று அறிவிக்கப்பட்டது.

தற்போது, இந்த டிஜிட்டல் திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான தொழில்நுட்ப வசதிகள் மற்றும் செயல்முறை தெளிவுபடுத்தல் பணிகளில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இந்த மாற்றம் மூலம் நகராட்சி விதிமுறைகள் கடைப்பிடிப்பு அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments