முகப்பு
திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் தொழிலாளி தற்கொலை

சேரன்மகாதேவியில் கூலித் தொழிலாளி வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 3:21 AM
பகிர்:
Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 10:38 PM

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் கூலித் தொழிலாளி வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சேரன்மகாதேவி பழைய கிராமம் தெருவைச் சோ்ந்த வீரபாண்டியன் மகன் மாரியப்பன் (56). கூலி வேலை செய்து வந்தாா்.

கடந்த சிலமாதங்களாக கடும் வயிற்று வலியால் அவதிபட்டாராம் . இதில் மனமுடைந்த மாரியப்பன், வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 3:21 AM

தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று மாரியப்பன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.