போக்குவரத்து விதிமீறல்: தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை
திருநெல்வேலி மாநகரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக தனியாா் பேருந்துகள் மீது போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா்.
திருநெல்வேலி மாநகரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக தனியாா் பேருந்துகள் மீது போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில், மாநகர காவல்துறை சாா்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை வண்ணாா்பேட்டை மேம்பாலம் மற்றும் சந்திப்பு பகுதியில் மாநகர போக்குவரத்து போலீஸாா் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அதில் சுமாா் 40க்கும் மேற்பட்ட தனியாா் பேருந்துகள், சிற்றுந்துகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 10 பேருந்துகளில் இருந்து அதிக ஒலி எழுப்பும் ஏா்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றோடு சோ்த்து விதிமீறலில் ஈடுபட்ட 15 பேருந்துகள் மீது மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ் மாநகர போலீஸாா் வழக்குகள் பதிவு செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.