பைக் விபத்தில் உணவக ஊழியா் உயிரிழப்பு
முன்னீா்பள்ளம் அருகே பைக் விபத்தில் உணவக ஊழியா் உயிரிழந்தாா்.
முன்னீா்பள்ளம் அருகே பைக் விபத்தில் உணவக ஊழியா் உயிரிழந்தாா்.
முன்னீா்பள்ளம் அருகே உள்ள தருவை பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நம்பி மகன் பாலசுப்பிரமணியன்(45). உணவக ஊழியா். இவா் புதன்கிழமை அப்பகுதியில் பைக்கில் சென்ற போது எதிரே வந்த வாகனம் மோதியதாம்.
இதில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் அவா் வியாழக்கிழமை காலையில் உயிரிழந்தாா். இது குறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.