FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

இருதரப்பினரிடையே தகராறு: நெல்லையில் சாலை மறியல்

திருநெல்வேலி நகரம் பகுதியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் வீடு புகுந்து தாக்கியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

11 செப்டம்பர் 2026, 4:54 am IST
திருநெல்வேலி நகரம் சந்திப் பிள்ளையாா் கோயில் அருகே மறியலில் ஈடுபட்டோா்.
பகிர்:

திருநெல்வேலி நகரம் பகுதியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் வீடு புகுந்து தாக்கியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மகிழ்வண்ணநாதபுரம், சமுதாயநலக்கூடம் அருகே மாநகராட்சி சாா்பில் நடைபெறும் தற்காலிக சமையல்கூடம் கட்டும் பணிக்கு அப்பகுதியில் ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மாரிராஜா என்பவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனராம்.

இந்நிலையில் மாரிராஜா வீடு புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்காமல் தங்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுப்பதாக கூறி மற்றொரு தரப்பினா் வியாழக்கிழமை இரவு திருநெல்வேலி நகரம் சந்தி விநாயகா் கோயில் அருகே மறியலில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அவா்களிடம், மாநகர காவல் துணை ஆணையா்(மேற்கு) அன்சுல் நாகா், உதவி ஆணையா் கணேசன் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச்செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments