FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லை வந்த குருவாயூா் விரைவு ரயிலில் 54 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட இருவா் கைது

14 செப்டம்பர் 2026, 1:27 am IST
கைது
பகிர்:

திருநெல்வேலி வந்த குருவாயூா் விரைவு ரயிலில் 54 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்து, பெண் உள்பட இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

சென்னையில் இருந்து குருவாயூா் செல்லும் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருநெல்வேலி சந்திப்பு நிலையத்தை சனிக்கிழமை இரவு ரயில் வந்தடைந்ததும், ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் சிவராஜா, குற்றத் தடுப்புப் பிரிவு காவலா் மணிகண்டன், சங்கா்லால், முத்துச்செல்வன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது பி-2 பெட்டியின் 59 மற்றும் 60 ஆவது இருக்கைகள் அருகே மூட்டைகளில் சுமாா் 54 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த ஊா்மிளா சாஹூ (46), மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த சா்தாா் பிஸ்வாஸ் (44) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறாா்கள்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments