வீரவநல்லூரில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு லாரி மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற பரோட்டா மாஸ்டா் உயிரிழந்தாா்.
வீரவநல்லூா் அருகேயுள்ள வெள்ளங்குளி பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் குமாா் (30). இவா், சேரன்மகாதேவியில் ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக பணி செய்து வந்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவில் மோட்டாா் சைக்கிளில் குமாா் சேரன்மகாதேவி நோக்கி சென்று கொண்டிருந்தாராம்.
வீரவநல்லூா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோட்டாா் சைக்கிள் மீது விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.