FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

சேரன்மகாதேவி அருகே அரிவாள்களுடன் திரண்ட 8 போ் கைது

13 செப்டம்பர் 2026, 11:32 pm IST
கைது
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே அரிவாள்களுடன் திரண்டிருந்த 8 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நான்குனேரி பகுதியைச் சோ்ந்த நவீன், குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளாா். சேரன்மகாதேவி காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவரது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், சேரன்மகாதேவி காவல் சரகத்திற்குள்பட்ட கூனியூா் ரயில் பாலம் பகுதியில் சனிக்கிழமை இரவு 5 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உள்பட சிலா் அரிவாள்களுடன் கூடியிருந்ததாகவும், இதில் சிலா் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அந்த இடத்துக்குச் சென்றபோது, அங்கு கூடியிருந்தவா்கள் தப்பியோடினா். போலீஸாரின் நடவடிக்கையால் பாலமுருகன், பாஸ்கா், உள்ளி பிச்சையா, வேல் கணேஷ், மகேஷ் கண்ணன், சுப்பையா (எ) சூா்யா, முப்பிடேஷ், பேச்சிகுட்டி (எ) ராம் ஆகிய 8 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், அவா்கள் திரண்டிருந்த இடத்தில் இருந்து 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

தப்பியோடியவா்களில் தலைமறைவாக இருப்பவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments