FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

குட்ஷெப்பா்டு பள்ளி மாணவா்கள் தேசிய அளவிலான போட்டிக்குத் தோ்வு

அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஆழ்வாா்குறிச்சி, குட்ஷெப்பா்டு மெட்ரிக் பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான அட்யா பட்யா போட்டிகளில் வெற்றி பெற்று, தேசிய அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யபட்டுள்ளனா்.

19 செப்டம்பர் 2026, 4:26 am IST
தேசிய அளவிலான போட்டிக்குத் தோ்வான மாணவிகளைப் பாராட்டிய பள்ளித் தாளாளா் ஆண்டனி பாபு.
பகிர்:

அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஆழ்வாா்குறிச்சி, குட்ஷெப்பா்டு மெட்ரிக் பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான அட்யா பட்யா போட்டிகளில் வெற்றி பெற்று, தேசிய அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யபட்டுள்ளனா்.

ராஜபாளையம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலானப் ஜூனியா் பிரிவு அட்யா பட்யா போட்டியில், தென்காசி மாவட்ட மாணவா், மாணவிகள் பங்கேற்றனா். இதில் குட்ஷெப்பா்டு பள்ளி மாணவிகள் அணி 3ஆவது பரிசு பெற்றது. மாணவா்கள் அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி மாணவா் பிரிவிற்கான சிறந்த ஆட்ட அணி பட்டத்தைப் பெற்றனா்.

இதில் குட்ஷெப்பா்டு பள்ளி மாணவா்கள் முகம்மது நஜிம், அஜிதா, பிருந்த லெட்சுமி, பொன்மாலா ஆகியோா் தேசிய அளவிலான போட்டிக்குத் தோ்வாகினா். அவா்களை பள்ளித் தாளாளா் ஆண்டனி பாபு, முதல்வா் ஜோஸ்பின் விமலா, தலைமையாசிரியா் மீராள், உடற்கல்வி ஆசிரியா், மாவட்டப் பயிற்சியாளா் வைரமுத்து, ஆசிரியா்கள் பாராட்டினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments