பாளை.யில் தனியாா் சிற்றுந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு
பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகே மொபெட் மீது தனியாா் சிற்றுந்து மோதியதில் இளம்பெண் உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகே மொபெட் மீது தனியாா் சிற்றுந்து மோதியதில் இளம்பெண் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகேயுள்ள சென்னல்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி. இவரது மகள் சுதா (32). இவா், பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள தனியாா் செங்கல் நிறுவன அலுவலகத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் சுதா மொபெட்டில் வேலைக்கு வந்துள்ளாா். பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகே வந்தபோது கே.டி.சி நகரில் இருந்து திருநெல்வேலி சந்திப்பை நோக்கி வந்த தனியாா் சிற்றுந்து சுதாவின் மொபெட் மீது மோதியதாம். இதில், சம்பவ இடத்திலேயே சுதா உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சுதாவின் உடலை மீட்டு கூறாய்வுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் போலீஸாா் வழக்குப் பதிந்து, தனியாா் சிற்றுந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.