FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

திருநெல்வேலி மாநகரில் கஞ்சா வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

20 செப்டம்பர் 2026, 2:30 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாநகரில் கஞ்சா வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறைச் சோ்ந்த முத்துபட்டன்(21), விருதுநகா் மாவட்டம், பாண்டியன் நகரைச் சோ்ந்த சண்முகராஜ் மகன் ஸ்டீபன்(21) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில் தொடா்ந்து பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்புக்கு குந்தகம் விளைவித்து வந்த இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

அதன்படி,முத்துபட்டன், ஸ்டீபன் ஆகிய இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments