தச்சநல்லூரில் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி: துணை மேயா் ஆய்வு
தச்சநல்லூரில் மழைநீா் வடிகால்களை தூா்வாரும் பணிகளை துணை மேயா் கே.ஆா்.ராஜு ஆய்வு செய்தாா். வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகளை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் தச்சநல்லூா் மண்டலம் 1 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் ஓடைகளை தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது. சிதம்பரநகா், நல்மேய்ப்பா்நகா், முல்லைநகா் பகுதிகளில் வடிகால் ஓடைகளில் இருந்த கருவேல மரங்கள் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு அப்புறப்படுத்தப்பட்டன. இப் பணிகளை திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயா் கே.ஆா். ராஜு ஆய்வு செய்தாா்.
ஓடை மராமத்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.