சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவர் தலைமறைவு
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முதியவரை போலீஸார் தேடிவருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முதியவரை போலீஸார் தேடிவருகின்றனர்.
களியக்காவிளை அருகேயுள்ள ஆலம்பாறை, கருமானூர் நெட்டறக்கல்பற்று பகுதியைச் சேர்ந்த சிறுமியிடம், அதே பகுதியைச் சேர்ந்த ஜாண்சன் (77) என்பவர் கடந்த மாதம் 28 ஆம் தேதி பாலியல் தொந்தரவு செய்ய முயன்றாராம். அப்போது, அங்கு வந்த சிறுமியின் பாட்டியைப் பார்த்ததும் ஜாண்சன் அங்கிருந்து தப்பிவிட்டாராம்.
இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் உதவி ஆய்வாளர் பிரேமா வழக்குப்பதிந்தார். மேலும், காவல் ஆய்வாளர் வனிதா விசாரணை நடத்தி ஜாண்சனை தேடி வருகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.