FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாகர்கோவிலில் ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துக்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி

அதிமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில் நாகர்கோவிலில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துக்கு ரூ. 20  ஆயிரம் நிதி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

அதிமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில் நாகர்கோவிலில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துக்கு ரூ. 20  ஆயிரம் நிதி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்தார். மேலும்  குமரி மாவட்ட அதிமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணியில் உறுப்பினராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் பரமசிவம் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மனைவி வனிதாவிடம், குடும்ப உதவி நிதியாக ரூ. 20 ஆயிரத்துக்கான காசோலையை, குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலர் எஸ்.ஏ.அசோகன் வழங்கினார். 
நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் சேவியர் மனோகரன்,  எஸ்.ஏ.விக்ரமன், அகஸ்தீசுவரம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணைச் செயலர் நாஞ்சில்நகுலன், இளைஞர் பாசறைச் செயலர் ஜெயசீலன்,  வழக்குரைஞர் ஜெயகோபால், ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments