ஈத்தாமொழியில் பெண்ணை தாக்கி 7 பவுன் நகை பறிப்பு
குமரி மாவட்டம், ஈத்தாமொழியில் பெண்ணை தாக்கி 7 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
குமரி மாவட்டம், ஈத்தாமொழியில் பெண்ணை தாக்கி 7 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
கன்னியாகுமரி அருகேயுள்ள கொட்டாரம் பெரியவிளை பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் கேரள மாநிலத்தில் கட்டட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (33). 2 குழந்தைகள் உள்ளனர்.
இதில் ஒரு குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ரேவதி சனிக்கிழமை தனது மொபெட்டில் 2 குழந்தைகளையும், தனது சகோதரியையும் அழைத்துக் கொண்டு நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றார். பின்னர், அதே மொபெட்டில் ரேவதி ஈத்தாமொழியில் உள்ள தனது தாயார் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
வடக்கு சூரங்குடி அருகே சென்றபோது, அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மொபெட்டை வழிமறித்து ரேவதியை தாக்கி, அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஈத்தாமொழி காவல் நிலைய ஆய்வாளர் முத்துராஜ், உதவி ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.