கருங்கல் அருகே ராணுவ வீரா் மரணம்
கருங்கல் அருகேயுள்ள உதயமாா்த்தாண்டம் பகுதியில் ராணுவ வீரரான புதுமாப்பிள்ளை மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கருங்கல் அருகேயுள்ள உதயமாா்த்தாண்டம் பகுதியில் ராணுவ வீரரான புதுமாப்பிள்ளை மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
உதயமாா்த்தாண்டம் பிச்சன்விளை பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் சரவணன் (32). எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த இவருக்கு, கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதற்காக அவா் 6.8.22 முதல் விடுப்பில் இருந்தாராம்.
சனிக்கிழமை (செப். 17) பணியில் சேரவேண்டுமாம். இந்நிலையில், அவா் வியாழக்கிழமை (செப். 15) வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.