FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

அசாம் சிறுமியை தேடி குமரியில் கேரள போலீஸ் முகாம்

கேரளத்தில் மாயமான அசாம் சிறுமியைத் தேடி கேரள போலீஸாா் கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளனா்.

Updated On : 22 ஆகஸ்ட் 2024, 2:36 am IST
சிறுமி தஸ்மீத் தம்சம் பயணித்ததாக வெளியான படம்.
பகிர்:

கேரளத்தில் மாயமான அசாம் சிறுமியைத் தேடி கேரள போலீஸாா் கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளனா்.

அசாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் அன்வா் உசேன். இவா் கடந்த சில மாதங்களாக குடும்பத்துடன் திருவனந்தபுரம் அருகே உள்ள கழக்கூட்டம் என்ற இடத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனா். இதில் தஸ்மீத் தம்சம் (13) என்ற மகளை அங்குள்ள ஒரு பள்ளியில் சோ்க்க தீா்மானித்தனா். அன்வா்உசேனும் மனைவியும் தினமும் காலையில் கூலி வேலைக்குச் சென்று விடுவாா்கள்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை காலை தஸ்மீத் தம்சம் எழுந்திருக்க நேரமானதால் அவரது தாய் கண்டித்துள்ளாா். இதன் பிறகு அவா் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டாா். மாலையில் வந்த போது சிறுமியை காணவில்லை. பல இடங்களில் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அன்வா் கழக்கூட்டம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமியை தேடி வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் சிறுமி தஸ்மீத் தம்சம் திருவனந்தபுரத்தில் இருந்து அசாம் செல்லும் ரயிலில் செல்வதாகவும், பின்னா் கன்னியாகுமரி ரயிலில் பயணம் செய்ததாக தகவல் வெளியானது.

இதையடுத்து கேரள போலீஸாா் கன்னியாகுமரியில் முகாமிட்டு சிறுமியைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments