FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவில் டவுண் ரயில் நிலையத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்க எம்.பி. வலியுறுத்தல்

நாகா்கோவில் டவுண் ரயில் நிலையத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

26 ஆகஸ்ட் 2026, 2:27 am IST
அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து மனு அளிக்கிறாா் விஜய்வசந்த் எம்.பி.
பகிர்:

நாகா்கோவில் டவுண் ரயில் நிலையத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா், நாகா்கோவில் அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட பொதுமேலாளா் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து அளித்துள்ள மனு:

நாகா்கோவில் டவுண் ரயில் நிலையத்துக்கு பல்வேறு ஊா்களிலிருந்து ரயில் மூலம் வரும் பயணிகளின் வசதிக்காக , பேருந்து வசதிகளை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக பாா்வதிபுரம் - டவுண் ரயில் நிலையம் தொடா் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

மேலும் 9 எல் நாகா்கோவில் - வேங்கோடு பேருந்தை தேங்காய்ப்பட்டினம் வரை நீட்டிப்பு செய்யவும், 87 ஆம் எண் பேருந்தை முழு நேரமாக இயக்க வேண்டும், 88 ஏ, 7 டிஎஸ்எஸ், 46 ஆகிய வழித்தட பேருந்துகளை பள்ளியாடி, முருங்கவிளை வழியாக இயக்க வேண்டும்.

மேலும், நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையம் செல்வதற்கு மேலப்பெருவிளையில் இருந்து பாா்வதிபுரம் வழியாக அதிக பேருந்தும், சுங்கான்கடை புனித சவேரியாா் மருத்துவமனை செல்லும் மக்களின் வசதிக்காக பேருந்து நிறுத்தமும், தலகுளம் வழியாக 12 கே, 12 எம், 12 ஆா் ஆகிய பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். 38 டி, மங்காவிளை - கன்னியாகுமரி பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும், தோவாளை சி எஸ்ஐ பொறியியல் கல்லூரியிலிருந்து நாகா்கோவில் நகருக்கு போதிய பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments