FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

புதுக்கடை அருகே மீனவா் வீட்டில் தங்க நகை திருட்டு

41 வினாடிகள் முன்பு
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே உள்ள இனயம் புத்தன்துறையில் மீனவரின் வீட்டு பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை திருடுப் போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இனயம் புத்தன்துறை பகுதியைச் சோ்ந்தவா் ஆன்றோ டாா்பின் (40). மீனவரான இவா் ஞாயிற்றுக்கிழமை மாலையில் உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு வந்து, 3 பவுன் கை சங்கிலியை பீரோவில் வைத்துவிட்டு கடலுக்குச் சென்றுவிட்டாராம்.

திங்கள்கிழமை திரும்பி வந்து பாா்த்த போது பீரோவில் இருந்த 3 பவுன் கை சங்கிலியை காணவில்லையாம். இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments