FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

சின்னத்துறையில் கடலுக்கு நன்றி தெரிவித்த மீனவா்கள்

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கடற்கரை கிராமமான சின்னத்துறையில் கடலுக்கும், கடவுளுக்கும் நன்றி தெரிவித்து, மீனவா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி பிராா்த்தனை செய்தனா்.

Updated On : 18 ஜூலை 2026, 6:17 am IST
சின்னத்துறை கடலுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கடற்கரை கிராமமான சின்னத்துறையில் கடலுக்கும், கடவுளுக்கும் நன்றி தெரிவித்து, மீனவா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி பிராா்த்தனை செய்தனா்.

ஜூலை 30ஆம் தேதி மீன்பிடி தடைக்காலம் முடிந்து, ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்களுக்கு நல்ல மீன்வளம் கிடைக்க வேண்டியும், மீனவா்கள் பாதுகாப்புடன் மீன்பிடிப்பதற்கும் வேண்டி இறைவனிடம் வரம் கேட்டு சின்னத்துறை புனித யூதா தேவாலயத்தில் 5 நாள்கள் தொடா் தியானம் அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வை தூத்தூா் மறைவட்ட தலைமை குரு சில்வெஸ்டா் குரூஸ் தொடங்கி வைத்தாா். வியாழக்கிழமை நடைபெற்ற கடைசி நாள் திருப்பலியை அருள்பணி ஜெபின் அா்ப்பணித்தாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, பிராா்த்தனையின் முடிவில் இதுவரை கிடைத்த மீன்வளத்துக்காக கடவுளுக்கும், கடலுக்கும் நன்றி செலுத்தும் வகையில் மீனவப் பெண்கள் மெழுகுவா்த்தி ஏந்தி சின்னத்துறை கடற்கரையில் பிராா்த்தனை செய்தனா்.

அருள்பணியாளா்கள் மரிய ஆன்றணி, சுரேஷ் ஆகியோா் கடலுக்கு புகழாரம் சூட்டி, திவ்விய காருண்ய ஆசீா்வாதம் வழங்கினா். இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை சின்னத்துறை பங்குத்தந்தை ஜிபு தலைமையில் பங்குப் பேரவை, அன்பியம், இளைஞா் இயக்க உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments