FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

குமரி அம்மன் கோயில்களில் மோகன் பகவத் சுவாமி தரிசனம்

Updated On : 20 ஜூலை 2026, 5:23 am IST
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
பகிர்:

கன்னியாகுமரிக்கு நான்கு நாள் பயணமாக வந்த அகில இந்திய ஆா்.எஸ்.எஸ். தலைவா் மோகன் பகவத் பகவதியம்மன் கோயில், ஸ்ரீ தியாக சௌந்தரி அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

நான்கு நாள் பயணமாக கடந்த 17- ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்துக்கு மோகன் பகவத் வந்தாா். அவரை கேந்திர நிா்வாகிகள் வரவேற்றனா். அங்கு தங்கிய அவா், கேந்திர நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

கேந்திர வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கலந்துரையாடினாா். ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) காலை கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், சன்னதி தெருவில் உள்ள 24-ஆவது சக்தி பீடமான தியாக சௌந்தரி பத்திரகாளியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா், உடல்நலக் குறைவு காரணமாக நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவின் அகில இந்திய தலைவா் ஏ.பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

Advertisement

Advertisement

நான்காவது நாளான திங்கள்கிழமை காலை புறப்பட்டு செல்கிறாா். ஆா்.எஸ்.எஸ். தலைவா் மோகன் பகவத் வருகையையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் மேற்பாா்வையில் கன்னியாகுமரி துணைக் கண்காணிப்பாளா் பிரகாஷ் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments