தக்கலை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
தக்கலை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
அருமனை அருகே வெள்ளாங்கோடு பகுதியை சோ்ந்த பாபு மகன் ராகுல் (22). இவா், தனது நண்பரான கோதையாறு, முடவன்பொற்றையைச் சோ்ந்த விஜயன் மகன் உன்னிகிருஷ்ணன்(23 என்பவருடன் தக்கலை பழைய பேருந்து நிலையம் வழியாக ஒரு பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தனா்.
அப்போது, பைக் நிலை தடுமாறி கவிழ்ந்ததில் இருவரும் பலத்த காயம் அடைந்தனா். அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ராகுல் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப்பந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.