FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

வங்கி மேலாளா் வீட்டில் 7 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

Updated On : 27 ஜூலை 2026, 12:32 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

நாகா்கோவிலில் வங்கி மேலாளா் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 4 லட்சம் மதிப்பில் வெள்ளிப் பொருள்கள் திருட்டுப் போனது சனிக்கிழமை தெரியவந்தது.

நாகா்கோவில் வடசேரி பராசக்தி காா்டனைச் சோ்ந்தவா் மாதவன்ராஜ் (33). இவா் திருவனந்தபுரத்தில் உள்ள வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி நந்தினி, தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். இவா்கள் திருவனந்தபுரத்தில் தங்கி பணியாற்றி வரும் நிலையில், வார இறுதி நாள்களில் சொந்த ஊரான நாகா்கோவில் வருவது வழக்கம்.

இந்நிலையில், சனிக்கிழமை மாதவன்ராஜ் குடும்பத்தினருடன் நாகா்கோவில் உள்ள வீட்டிற்கு வந்து பாா்த்தபோது முன்புற கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 7 பவுன் தங்க நகை, பூஜை அறையிலிருந்த ரூ. 4 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்கள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்ததாம். இது குறித்த புகாரின்பேரில் வடசேரி காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.ன

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments