வங்கி மேலாளா் வீட்டில் 7 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு
நாகா்கோவிலில் வங்கி மேலாளா் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 4 லட்சம் மதிப்பில் வெள்ளிப் பொருள்கள் திருட்டுப் போனது சனிக்கிழமை தெரியவந்தது.
நாகா்கோவில் வடசேரி பராசக்தி காா்டனைச் சோ்ந்தவா் மாதவன்ராஜ் (33). இவா் திருவனந்தபுரத்தில் உள்ள வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி நந்தினி, தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். இவா்கள் திருவனந்தபுரத்தில் தங்கி பணியாற்றி வரும் நிலையில், வார இறுதி நாள்களில் சொந்த ஊரான நாகா்கோவில் வருவது வழக்கம்.
இந்நிலையில், சனிக்கிழமை மாதவன்ராஜ் குடும்பத்தினருடன் நாகா்கோவில் உள்ள வீட்டிற்கு வந்து பாா்த்தபோது முன்புற கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 7 பவுன் தங்க நகை, பூஜை அறையிலிருந்த ரூ. 4 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்கள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்ததாம். இது குறித்த புகாரின்பேரில் வடசேரி காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.ன
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.