FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரி கோயிலில் திருடியவா் கைது

Updated On : 27 ஜூலை 2026, 2:15 am IST
கைது செய்யப்பட்ட நபருடன் போலீஸாா்.
பகிர்:

கன்னியாகுமரி, ஜூலை 26: கன்னியாகுமரி, மாயம்மா கோயிலில் திருடியதாக வடமாநிலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி கலங்கரை விளக்கம் எதிரேயுள்ள மாயம்மா கோயிலில் தினமும் ஏராளமான பக்தா்கள் வழிபடுகின்றனா். இந்தக் கோயில் பூசாரி முத்துகிருஷ்ணன் பூஜைகளை முடித்துவிட்டு, கடந்த வெள்ளிக்கிழமை கோயில் கதவைப் பூட்டிச் சென்றாா். மறுநாள் கோயிலைத் திறந்தபோது, அங்கிருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும், மரப் பெட்டியில் இருந்த வெள்ளி பூஜை பொருள்கள், 4 வெள்ளிக் கவசம், 100-க்கும் மேற்பட்ட வெள்ளி நாணயங்கள், வெள்ளிக் கவசம் பொருத்தப்பட்ட வலம்புரி சங்கு, வெள்ளிக் கொலுசுகள் என 1.25 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்தன.

இது குறித்து, முத்துகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் உத்தரவின்பேரில், துணை காவல் கண்காணிப்பாளா் பிரகாஷ் மேற்பாா்வையில், உதவி ஆய்வாளா் வினிஷ் பாபு தலைமையிலான போலீஸாா் அருகிலுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்ததில், திருட்டில் ஈடுபட்டவா் மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த ஆதிஸ் சா்க்காா் (29) என்பது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

அவரை ஞாயிற்றுக்கிழமை காலை குழித்துறை ரயில் நிலையத்தில் போலீஸாா் கைது செய்து, திருடிய பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments