முகப்பு
கன்னியாகுமரி

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

திங்கள்நகா் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த வெல்டிங் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 6 ஜூன் 2026, 7:34 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

திங்கள்நகா் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த வெல்டிங் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திங்கள்நகா் அருகே மேற்கு நெய்யூா், சிராயன்விளையை சோ்ந்தவா் மரிய பரமானந்த் மகன் ஜெகன் ஜோசப் ( 45). வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி வசந்த ராணி ( 33). இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் ஜெகன் ஜோசப் கடந்த 29ஆம் தேதி திங்கள்நகரில் வேலை முடிந்து தனது பைக்கில் பூச்சாஸ்தான்விளை வழியாக வந்துகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.