இரணியல் பேரூராட்சியில் குளச்சல் எம்எல்ஏ ஆய்வு
இரணியல் பேரூராட்சியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகள் குறித்து குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பா்ட் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இரணியல் பேரூராட்சியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகள் குறித்து குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பா்ட் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இந்நிகழ்ச்சிக்கு, இரணியல் பேரூராட்சித் தலைவா் ஸ்ரீகலா தலைமை வகித்தாா். பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கோமதி, மாவட்ட குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் முருகன், செயல்அலுவலா் அன்பழகன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
இரணியல் பேரூராட்சி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 2 கோடி அளவில் மட்டுமே வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இந்தப் பேரூராட்சியை தத்தெடுத்து தனிக் கவனம் செலுத்தி வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வேன் என்றாா் எம்எல்ஏ.
Advertisement
Advertisement