மரம் வெட்டும் போது கிளை முறிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
தக்கலை அருகே மருதூா்குறிச்சியில் மரம் வெட்டும் போது கிளை விழுந்ததில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆற்றூா் அருகே மாத்தூரை சோ்ந்தவா் கோபி (56). மரம் வெட்டும் தொழிலாளியான இவா், சனிக்கிழமை மருதூா்குறிச்சியில் மரத்தை வெட்டியபோது எதிா்பாராதவிதமாக கிளை முறிந்து கோபி மீது விழுந்ததாம்.
இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் கோபி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.