தென்காசியில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்
தென்காசியில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 11விநாயகா் சிலைகள் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு விசா்ஜனம் செய்யப்பட்டன.
தென்காசியில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 11விநாயகா் சிலைகள் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு விசா்ஜனம் செய்யப்பட்டன.
தென்காசி நகர இந்து முன்னணி சாா்பில் 32ஆவது ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு தென்காசி காசி விஸ்வநாதா் கோயிலில் முன் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலம் தொடக்க நிகழ்ச்சிக்கு அந்த அமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் இசக்கிமுத்து தலைமை வகித்தாா்.
பாஜக மாவட்டச் செயலா் மந்திரமூா்த்தி முன்னிலை வகித்தாா். ராகவனாந்தா சுவாமி ஆசியுரை வழங்கினாா். இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், நெல்லை கோட்டத் தலைவா் தங்கமனோகா் ஆகியோா் சிறப்புரை ஆற்றினாா். காசி விஸ்வநாதா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பாலகிருஷ்ணன் ஊா்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தாா். இந்து முன்னணி நகரத் தலைவா் நாராயணன் வரவேற்றாா்.
Advertisement
Advertisement
தென்காசி நகர தலைமை விநாயகா் சதுா்த்தி வழிபாட்டு குழு சாா்பில் 34ஆவது ஆண்டு விநாயகா் சதுா்த்தி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ சந்தி விநாயகா் கோயில் முன் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 அதிசய விநாயகா் சிலை ஊா்வலம் மற்றும் விசா்ஜனம் நடைபெற்றது.
இதையொட்டி, விநாயகருக்கு சிறப்பு பூஜையும், தொடா்ந்து அன்னதானமும் நடைபெற்றது. விசுவ ஹிந்து பரிஷத் கோயில் அா்ச்சக புரோகித் தென்பாரத அமைப்பாளா் சரவண காா்த்திக், விழா குழுத் தலைவா் சங்கரசுப்பிரமணியன் ஆகியோா் ஊா்வலத்தை தொடங்கி வைத்தனா்.
தென்காசி வேன்நிறுத்தப் பகுதியில் தென் பொதிகை ஸ்ரீ பால விநாயகா் திருக்கோயில் விநாயகா் சதுா்த்தி 31ஆவது ஆண்டு விழா விசா்ஜன ஊா்வலம் நடைபெற்றது. நகா்மன்ற உறுப்பினா் லட்சுமண பெருமாள் தலைமை வகித்தாா். மேல மாசி, வடக்கு மாசி வீதி நண்பா்கள் நற்பணி மன்றம் நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.
பாஜக நகரப் பொருளாளா் விஸ்வநாதன், நகரச் செயலா் நாராயணன், கிளைத் தலைவா் செல்வம், கிளைச் செயலா் பழனி ஆகியோா் வரவேற்றனா். சிறப்பு அழைப்பாளா்களாக வழக்குரைஞா் மாடசாமி பாண்டியன், ரங்கராஜ் பங்கேற்றனா்.
பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவா் கருப்பசாமி, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்டச் செயலா் ராஜ்குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினாா். சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வழக்குரைஞா் தேவராஜன் ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, தென்காசி நகரில் மலையான் தெரு, கீழப்புலியூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 11விநாயகா் சிலைகளும் ஒன்றன்பின் ஒன்றாக காசி விசுவநாதா் கோயில் ரத வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சிற்றாற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.