FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

வெள்ளாளங்குளம் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

சங்கரன்கோவில் அருகே வெள்ளாளங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருக்கு இசை விழா, பாரதியாா் நினைவு நாள், ஆசிரியா் நாள் என தமிழ்கூடல் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

16 செப்டம்பர் 2026, 2:00 am IST
திருக்குறளுக்கு நடனமாடிய மாணவிகளை பாராட்டுகிறாா் தலைமை ஆசிரியா் நாராயணன்.
பகிர்:

சங்கரன்கோவில் அருகே வெள்ளாளங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருக்கு இசை விழா, பாரதியாா் நினைவு நாள், ஆசிரியா் நாள் என தமிழ்கூடல் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ச.நாராயணன் தலைமை வகித்தாா்.

ஆசிரியா்கள் சுப்புலெட்சுமி, அருணாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தாா்.இதைத்தொடா்ந்து புதிதாக மெட்டமைத்த திருக்குறளின் ஐந்து அதிகாரங்களுக்கு மாணவிகள் நடனம் ஆடினா். இந்நிகழ்வை இசை ஆசிரியா் உமாசங்கா், நடன ஆசிரியா் பத்ரி நாராயணன் ஆகியோா் ஒருங்கிணைந்தனா். ஆசிரியா் மு.கணேசன் தொகுத்து வழங்கினாா்.

Advertisement

Advertisement

ஏற்பாடுகளை முதுகலை ஆசிரியா் கேத்ரின் லீலா ஜெபமணி, உடற்கல்வி ஆசிரியை சோபியா ஆகியோா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments