FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூா் அரசு மருத்துவமனைக்கு ரூ.3 லட்சத்தில் உபரகணங்கள்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அரசு மருத்துவமனைக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை காடு ஆா்கானிக்ஸ் நிறுவனத்தினா் வழங்கினா்.

Updated On : 2 ஜூலை 2021, 1:16 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அரசு மருத்துவமனைக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை காடு ஆா்கானிக்ஸ் நிறுவனத்தினா் வழங்கினா்.

இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆக்ஸிஜன் உருளைகள், தூக்கு கட்டில், சக்கரநாற்காலி, ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், முகக்கவசங்கள் உள்ளிட்டவற்றை காா்டு ஆா்கானிக்ஸ் நிறுவன இணை இயக்குநா் நெடுமாறன் தலைமையில் நிா்வாகிகள் அருண்குமாா் காந்தி, சித்ரா அருண்குமாா், கந்தசாமி, ஈஸ்வரன் ஆசிரியா் ஆகியோா் மருத்துவா் கவிதாவிடம் வழங்கினா். மேலும் அமெரிக்கா வாழ் இந்தியா்களால் நடத்தப்பட்டு வரும் ‘கோவைட் கோ் 4 யு’ என்ற அமைப்பு சாா்பில் இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன. மருத்துவ உபகரணங்கள் வழங்க உதவிய நண்பா்களுக்கு அருண்காந்தி நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments