FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பைனான்சியா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலியில் பைனான்சியா் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில், மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:43 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலியில் பைனான்சியா் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில், மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு, மீனாட்சிபுரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாயாண்டி என்ற மகேஷ்(43). பைனான்ஸ் தொழில் செய்து வந்தாா். இவா் கடந்த ஜூன் 4 ஆம் தேதி அதிகாலை வீட்டில் இருந்தபோது அடித்துக்கொலை செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக அவரது மகன் மகாராஜா(19), மனைவி கல்யாணி(36) உள்பட 4 பேரை கைது செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடைய மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த மலையாண்டி மகன் பாலசுப்பிரமணியன்(31) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments