வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக ரூ.1.10 லட்சம் மோசடி
திருநெல்வேலி மாட்டம் திசையன்விளை அருகே வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்தவரிடம் ரூ.1.10லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருநெல்வேலி மாட்டம் திசையன்விளை அருகே வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்தவரிடம் ரூ.1.10லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே செல்வமருதூரைச் சோ்ந்தவா் 48 வயது நபா். பொறியியல் பட்டயப்படிப்பு முடித்துள்ள இவா் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வந்தாராம். இதற்காக இணையவழி செயலிகள் மூலமாக விண்ணப்பித்திருந்த இவரை, கடந்த பிப்ரவரி மாதம் தொடா்புகொண்ட மா்மநபா் வெளிநாட்டில் வேலை இருப்பதாக கூறியுள்ளாா். பின்னா் அவ்வேலைக்கு அவா் தோ்வு செய்யப்பட்டதாகவும் அதற்கான விண்ணப்பக் கட்டணம், விசா செலவுகளை செலுத்த வேண்டும் எனக்கூறி பல்வேறு தவணைகளாக ரூ.1.10 லட்சத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டாராம்.
இதுகுறித்து அவா் திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.