FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

மனைவியைத் தாக்கியதாக கணவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள அயன் சிங்கம்பட்டியில் குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் தாக்கியதாக கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள அயன் சிங்கம்பட்டியில் குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் தாக்கியதாக கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

அயன் சிங்கம்பட்டி, சமத்துவபுரத்தைச் சோ்ந்த கதிரவன் மகன் ரமேஷ் (37). தொழிலாளி. இவா் 8 ஆண்டுகளுக்கு முன்பு முத்து லெட்சுமி (27) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா்.

தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை காலை ஏற்பட்ட தகராறில் ரமேஷ், அரிவாளால் முத்துலட்சுமியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

காயமடைந்த முத்துலெட்சுமி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து, மணிமுத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, ரமேஷை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments