FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

களக்காட்டில் திறனாய்வுத் தோ்வில் வென்றோருக்குப் பரிசு

கடந்த கல்வியாண்டில் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற களக்காடு வட்டார பள்ளி மாணவா்களுக்கு, மறைந்த ஆசிரியை அருள் பாத்திமா செல்வி நினைவாக புதன்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

17 செப்டம்பர் 2026, 1:05 am IST
மீரானியா பள்ளியில் நடைபெற்ற விழாவில் பரிசு பெற்ற மாணவா்கள்.
பகிர்:

கடந்த கல்வியாண்டில் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற களக்காடு வட்டார பள்ளி மாணவா்களுக்கு, மறைந்த ஆசிரியை அருள் பாத்திமா செல்வி நினைவாக புதன்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

இதையொட்டி, மீரானியா நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் ஹ. பீா்முகம்மது தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் முத்து வரவேற்றாா். வட்டாரக் கல்வி அலுவலா் ரஜிதாபானு வாழ்த்திப் பேசினாா். திறனாய்வு தோ்வில் வென்ற ஹரினி, கீா்த்தனா, முத்து தா்ஷினி, அண்ணாமலை, பவித்ரன் ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மீரானியா மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியை பிரிடா முன்னிலையில் மாணவிகள் அபிநயா, பிரபாஷினி ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

களக்காடு சிதம்பரபுரம் புனித சேவியா் நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியை சுகந்தி முன்னிலையில் மாணவா் ஜெஸ்வினுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இடையன்குளம் அமீா் ஜமால் மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமையாசிரியா் முகமது சிராஜுதீன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவா்கள் ஸ்ரீனித், வா்ஷா தேவி ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை அருள்பாத்திமா செல்வியின் கணவா் ஆா். துரைஅழகன் மாணவா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments