கோவில்பட்டி ஸ்ரீகரா பள்ளி ஆண்டு விழா
கோவில்பட்டி ஸ்ரீகரா வித்யா மந்திர் (சி.பி.எஸ்.இ.) பள்ளியின் 4ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
கோவில்பட்டி ஸ்ரீகரா வித்யா மந்திர் (சி.பி.எஸ்.இ.) பள்ளியின் 4ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, பள்ளி நிர்வாகி செந்தில்குமார் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் ஷியாமளா செந்தில்குமார் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கிவைத்துப் பேசினார்.
திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பள்ளித் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மற்றும் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர், மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கிப் பேசினார். பாரத் வித்யா பவன் பள்ளித் தாளாளர் செந்தில் பழனி, ஒட்டன்சத்திரம் தொழிலதிபர் கே.எஸ்.மணி ஆகியோர் தலைமை விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். பள்ளி முதல்வர் முத்துக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளியின் செயல்பாடுகள் குறித்து பள்ளி இயக்குநர் ராஜேஷ் பேசினார்.
Advertisement
Advertisement
மாணவர், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி மாணவர் தலைவி ஹர்சினி நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.