FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

சமையல் எரிவாயு உருளைகளுக்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டியது இல்லை: ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளைகளுக்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டியது இல்லை என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

Updated On : 7 ஜூன் 2018, 5:34 am IST
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளைகளுக்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டியது இல்லை என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ.762 ஆகவும், கோவில்பட்டி மற்றும் எட்டயபுரத்தில் ரூ.760.50 ஆகவும், சாத்தான்குளம் பகுதிக்கு ரூ. 777.50 ஆகவும்,  கழுகுமலை பகுதிக்கு ரூ. 768 ஆகவும், கயத்தாறில் ரூ. 763.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்இதேபோல்,  பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ. 762 எனவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை ரூ. 762 எனவும் 1.6.2018 முதல் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, நுகர்வோர் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு (14.2 கிலோ) குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments