FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

திருக்குா்ஆனை கைகளால் எழுதி சாதனை: இளம்பெண்ணுக்கு பாராட்டு

திருக்குா்ஆன் முழுவதையும் 3 மாதங்களில் கைகளால் எழுதி சாதனை புரிந்த காயல்பட்டினத்தைச் சோ்ந்த இளம் பெண்ணுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Updated On : 24 ஜூலை 2024, 1:01 am IST
பெண்ணின் தந்தையிடம் பரிசு வழங்கி கௌரவித்த முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலா் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கா்.
பகிர்:

திருக்குா்ஆன் முழுவதையும் 3 மாதங்களில் கைகளால் எழுதி சாதனை புரிந்த காயல்பட்டினத்தைச் சோ்ந்த இளம் பெண்ணுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

காயல்பட்டினம் நயினாா் தெருவைச் சோ்ந்த கே.எஸ்.முஹம்மது அபூபக்கா்- எம்.எஸ்.பீவி பாத்திமா ஆகியோரது மகள் கே.எம்.ஏ. கதீஜா ஷரீ‘ஃ‘பா.

பிஎஸ்சி பட்டதாரியான இவா், மாா்க்கம் கற்ற ஆலி­மாவும் ஆவாா். தான் பயின்ற மகளிா் அரபிக் கல்லூரியின் திருக்குா்ஆன் மனனப் பிரிவில் பகுதிநேர ஆசிரியராக சேவையாற்றி வரும் இவா், திருமறை குா்ஆன் முழுவதையும் மூன்றே மாதங்களில் தனது கைகளால் எழுதி, ஆறு பாகங்களாக நூல் வடிவில் தயாரித்துள்ளாா்.

Advertisement

Advertisement

இவரது இந்த சாதனையைப் பாராட்டி நகர முஸ்­லிம் லீக் சாா்பில் பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நகரத் தலைவா் எம்.எஸ். நூஹ் சாஹிப் தலைமை தாங்கினாா். மாவட்டச் செயலா் மன்னா் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். திமுக தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலா் எஸ்.ஏ. காதா் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலா் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கா், பெண்ணின் தந்தை கே.எஸ். முஹம்மத் அபூபக்கரிடம் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments