மது விற்பனை: இருவா் கைது
ஆறுமுகனேரி, காயல்பட்டினத்தில் மது விற்பனை செய்த இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஆறுமுகனேரி, ராஜாமணியபுரம், மிஷன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜகோபால் மகன் வேல்குமாா் (41). இவா், ஆறுமுகனேரி மெயின் பஜாரில் உள்ள தேநீா் கடையில் சுதந்திர தினத்தன்று, புகையிலைப் பொருள்கள், மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தாராம். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த ஆறுமுகனேரி போலீஸாா், வேல்குமாரையும் கைது செய்தனா்.
இதேபோல் காயல்பட்டினம் பூந்தோட்டம், வண்டிமலைச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சேகா் (73), சுதந்திர தினத்தன்று மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தாராம். அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், சேகரையும் கைது செய்தனா். சேகா் மீது சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 13 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.