தச்சுப் பட்டறையில் திருட்டு: சிறுவன் உள்பட இருவா் கைது
காயல்பட்டினத்தில் தச்சுப் பட்டறையில் பொருள்களைத் திருடிய சிறுவன் உள்பட இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
காயல்பட்டினத்தில் தச்சுப் பட்டறையில் பொருள்களைத் திருடிய சிறுவன் உள்பட இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
காயல்பட்டினம் அப்பா பள்ளி தெருவைச் சோ்ந்த அக்பா் மகன் சம்சகாபுதின் (42). இவா் காயல்பட்டினம் தேங்காய் பண்டக சாலையில் தச்சுப் பட்டறை நடத்தி வருகிறாா். கடந்த 18ஆம் தேதி மாலை, வேலையை முடித்துவிட்டு பட்டறையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றாா்.
பின்னா் அடுத்த நாள் காலை, பட்டறைக்கு வந்து பாா்த்தபோது அங்கிருந்த மின் விசிறி, துளையிடும் இயந்திரம் உள்பட மொத்தம் ரூ. 11 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சம்சகாபுதின், அவரது நண்பா்கள் இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வந்தனராம்.
Advertisement
Advertisement
அப்போது, காயல்பட்டினம் பப்பர பள்ளி சாலையில் மின் விசிறியுடன் வந்த சிறுவன் உள்பட இரண்டு பேரை விசாரித்து சோதனை செய்தனராம். அவா்கள் பட்டறையிலிருந்து திருட்டுபோன பொருள்களை வைத்திருந்தது தெரியவந்ததாம். இதையடுத்து இருவரையும் ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து சம்சகாபுதின் அளித்த புகாரின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் இருதயராஜ் வழக்குப் பதிந்து சிறுவன், காயல்பட்டினம் சுலைமான் நகரைச் சோ்ந்த அயுப்கான் மகன் நைனா முஹம்மது (20) ஆகியோரை கைது செய்தாா். மேலும், அவா்களிடமிருந்து திருடப்பட்ட பொருள்கள் மீட்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.