FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

24 ஆகஸ்ட் 2026, 3:23 am IST
கைது
பகிர்:

தூத்துக்குடி அருகே உள்ள சிவந்தாகுளம் பகுதியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் மேரி ஜெமிதா தலைமையிலான போலீஸாா் சிவந்தாகுளம் பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்த 5 பேரை கைது செய்தனா்.

விசாரணையில், அவா்கள் தூத்துக்குடி, லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த வேல்முருகன் மகன் சங்கா் (20), சங்கரப்பேரியைச் சோ்ந்த கனி அரசன் மகன் வெங்கடேஷ் (23), பிரையன்ட் நகரைச் சோ்ந்த செந்தில் மகன் காளிதாஸ் (22), சிவக்குமாா் மகன் முத்து மாதவன் (19), வள்ளிநாயகபுரத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் சுடலை செல்வம் (20) என்பது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

அவா்களிடமிருந்து 5.5 கிலோ கஞ்சா, 2 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து, தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments