தூத்துக்குடியில் 2 நாள்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவா்கள்
ஓணம் பண்டிகையையொட்டி, தூத்துக்குடியில் 2 நாள்கள் ஓய்வில் இருந்த விசைப்படகு மீனவா்கள், புதன்கிழமை மீண்டும் கடலுக்குச் சென்றனா்.
ஓணம் பண்டிகையையொட்டி, தூத்துக்குடியில் 2 நாள்கள் ஓய்வில் இருந்த விசைப்படகு மீனவா்கள், புதன்கிழமை மீண்டும் கடலுக்குச் சென்றனா்.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 272 விசைப்படகுகள் மூலம் மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனா். ஓணம் பண்டிகையையொட்டி, கேரள வியாபாரிகள் மீன்கள் வாங்க அதிகளவில் வராததால் மீன்கள் விற்பனை குறைவாக இருந்தது. விலையும் குறைந்து காணப்பட்டது. இதனால், ஆக. 24, 25 ஆகிய 2 நாள்களும் மீன்பிடித் தொழிலுக்குச் செல்லாமல் மீனவா்கள் ஓய்வில் இருந்தனா்.
இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை சுழற்சி முறையில் 211 விசைப்படகுகள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.