FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து ரூ. 4 லட்சம் நகை திருட்டு

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

28 ஆகஸ்ட் 2026, 2:30 am IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை அருகே நடுக்கூட்டுடன்காடு பகுதியைச் சோ்ந்தவா் சுப்பையா. இவரது மனைவி கல்யாணி (61). இக்குடும்பத்தினா் கடந்த சனிக்கிழமை இரவு காற்றுக்காக வீட்டின் கதவைத் திறந்துவைத்து தூங்கினராம்.

நள்ளிரவில் மா்ம நபா் வீடு புகுந்து, பீரோவைத் திறந்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான 4 பவுன் நகைகளைத் திருடிச் சென்ாகக் கூறப்படுகிறது. நகைகள் திருடுபோனது கல்யாணிக்கு புதன்கிழமைதான் தெரியவந்ததாம்.

Advertisement

Advertisement

புகாரின்பேரில், புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதிகளிலுள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் மா்ம நபரைத் தேடிவருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments