FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் இளைஞருக்கு மிரட்டல்: 2 சிறாா்கள் உள்பட 5 போ் கைது

31 ஆகஸ்ட் 2026, 2:57 am IST
கைது
பகிர்:

கோவில்பட்டியில் முன்விரோதம் காரணமாக இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 சிறாா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி, இந்திரா நகரைச் சோ்ந்தவா் முனியசாமி மகன் போஸ் குமாா் (26). இவருக்கும், இந்திரா நகா், நாக கன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் மகன் ஹரிஹரன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இந்திரா நகா், வெற்றி விநாயகா் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போஸ் குமாரை மறித்து, ஹரிஹரன் உள்ளிட்ட 5 போ் அவதூறாகப் பேசி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் காயமடைந்த போஸ் குமாா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இந்திரா நகா், பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த சுடலை முத்து மகன் கருப்பசாமி (எ) காா்த்திக் (19), ஹரிஹரன் (19), வடக்கு தெருவைச் சோ்ந்த செண்பகம் மகன் கருப்பசாமி (41), 17 வயது சிறாா்கள் 2 போ் ஆகிய 5 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments