மாநில மின்னொளி கபடிப் போட்டி 3 ஆவது நாள்: முதல் ஆட்டத்தில் கரூா் சேரன் கல்லூரி அணி வெற்றி
தூத்துக்குடியில் 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான மின்னொளி கபடிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் கரூா் சேரன் கல்லூரி அணி வெற்றி பெற்றது.
தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் கபடிக் கழக ஆதரவுடன், சண்முகபுரம் கபடி கிளப், தாமோதரன் நகா் ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோயில் இளைஞரணி நண்பா்கள் குழு சாா்பில் முருகேசன் நாடாா் நினைவு கோப்பைக்கான 2-ஆம் ஆண்டு மாநில அளவிலான கல்லூரி மாணவா், மாணவிகளுக்கான மின்னொளி கபடிப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் 8 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகளும் பங்கேற்றுள்ளன. நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்லூரி மாணவா்களுக்கான முதல் அரை இறுதி ஆட்டத்தில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அணியை 30-21 என்ற புள்ளிகள் கணக்கில் கரூா் சேரன் கல்லூரி அணியும், இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில், சாய் கல்லூரி அணியை 36 -35 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை லயோலா கல்லூரி அணியும் வெற்றி பெற்றன.
இதையடுத்து வெற்றி பெற்ற அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. ஏற்பாடுகளை கபடி கந்தன் உள்ளிட்ட விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.