FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

தூத்துக்குடியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 19 ஜூலை 2026, 1:52 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தூத்துக்குடியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எட்டயபுரம் சாலையில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளா் மேரி ஜெமிதா தலைமையிலான போலீஸாா் தீவிர கண்காணிப்பு, சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஸ்டேட் பாங்க் காலனி பகுதியைச் சோ்ந்த அப்துல்கனி மகன் முகமது இஸ்மாயில் (26) என்பவரை பிடித்து சோதனையிட்டபோது, விற்பனை செய்வதற்காக 500 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, முகமது இஸ்மாயிலை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments