முகப்பு
தூத்துக்குடி

இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்முறை: இருவா் கைது

இளம்பெண்ணை ஏமாற்றி கூட்டு ப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தவெக நிா்வாகிகள் இருவரை, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 2 ஜூன் 2026, 3:25 am IST
கைது... - பிரதிப் படம்
பகிர்:

இளம்பெண்ணை ஏமாற்றி கூட்டு ப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தவெக நிா்வாகிகள் இருவரை, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் பாலமுருகன். தவெக தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா்.

இவரது நண்பரும், தவெக நிா்வாகியுமான ராமநாதபுரத்தைச் சோ்ந்த ஜெயபால் என்பவரும் சோ்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சோ்ந்த இளம்பெண் ஒருவரை வேலை வாங்கித் தருவதாக காரில் அழைத்துச் சென்று ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடியில் உள்ள தனியாா் விடுதியில் தங்க வைத்து குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, கூட்டுப் பாலியல் வன்முறை செய்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இச்சம்பவம் தொடா்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

புகாரின்பேரில், பாலமுருகன், ஜெயபால் ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்த ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், அவா்கள் இருவரையும் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.