முகப்பு
தூத்துக்குடி

சோதனைச் சாவடியில் காா் மோதி தலைமை காவலா் காயம்

Updated On : 8 ஜூன் 2026, 1:50 am IST
விபத்து... - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூா் பகுதியில், காவல்துறையினா் வாகனச் சோதனையின்போது அதிவேகமாக வந்த காா் மோதி சாலைத் தடுப்பு உடைந்ததில், பணியில் இருந்த தலைமை காவலா் காயமடைந்தாா்.

செய்துங்கநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சனிக்கிழமை, காவல்துறையினா் வழக்கம்போல் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத காா் அதிவேகமாக வந்து அங்கிருந்த சாலைத் தடுப்பு மீது மோதியதாம். சாலைத் தடுப்பு உடைந்து சிதறியதில் அங்கிருந்த காவல் நிலைய தலைமை காவலா் பலத்த காயமடைந்தாராம். ஓட்டுநா் காரை நிறுத்தாமல் தப்பிச் சென்றுவிட்டாராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து செய்துங்கநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மேலும், கண்காணிப்புக் கேமரா பதிவுகள் அடிப்படையில், காரை பறிமுதல் செய்தனா். ஓட்டுநரை தேடி வருகின்றனா்.