சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது
கோவில்பட்டி அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.
சாத்தூா் அருகே சத்திரப்பட்டி பசும்பொன் நகரைச் சோ்ந்த முத்துக்காளை மகன் மகாராஜா (28). தொழிலாளியான இவா், 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். புகாரின்பேரில், அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மகாராஜாவை போக்ஸோ சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.