பாலியல் தொல்லைகள்: எம்எல்ஏ கண்டனம்
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, பாலியல் தொல்லைகள் தொடா்கதையாகி வருவதாக திமுக தெற்கு மாவட்டச் செயலா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற கடந்த ஒரு மாதத்துக்குள் நாள்தோறும் பாலியல் வன்கொடுமை குறித்த செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இளம்பெண்கள், வயது முதிா்ந்தோா், குழந்தைகள் என எல்லா வயதினரும் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனா். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.
Advertisement
Advertisement
செயல்படாத அரசாக, மக்களை பாதுகாக்காத அரசாக த.வெ.க. அரசு இருந்து வருகிறது. அரசின் மெத்தனமான இப்போக்கு கண்டனத்துக்குரியது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.